Sunday, April 28, 2013

யாவருடனும் தனியாக


தை எலும்பைப் போர்த்துகிறது
அதற்குள்ளாக அவர்கள் ஒரு மனத்தை வைக்கிறார்கள்
அத்தோடு சில சமயங்களில் ஒரு ஆன்மாவையும்.

பெண்கள் சுவர்களின் மீது
சாடிகளைப் போட்டு உடைக்கிறார்கள்
ஆண்கள் மிக அதிகமாகக் குடிக்கிறார்கள்.

ஒருவரும் அந்த ஒன்றைக் காண்கிறதில்லை
என்றாலும் 
தேடிக்கொண்டேயிருக்கிறார்கள்
படுக்கையில் விழுந்தும் எழுந்தும்.

சதை எலும்பைப் போர்த்தியிருக்கிறது
அத்தோடு
சதைக்கும் மேலானதொன்றை
சதை தேடுகிறது.

எப்படியும் ஒரு வாய்ப்புமில்லை.
நாமெல்லாரும் ஒற்றை விதியால் சிக்குண்டுள்ளோம்.

எப்போதும் எவரும்
அந்த ஒன்றைக் கண்டடைகிறதில்லை.

நகரக் குப்பைமேடுகள் நிறைகின்றன
வீண்பொருட் களங்கள் நிறைகின்றன
பைத்தியக்கார விடுதிகள் நிரம்புகின்றன
மருத்துவமனைகள் நிரம்புகின்றன
கல்லறைகள் நிரம்புகின்றன.

வேறதுவும் நிரம்புகிறதில்லை.

சாள்ஸ் புகாவ்ஸ்கி