நேற்றுக் காலை பீபீ குளம் நாற்சந்தி டீக்கடையில் நானும் பிற ஏழெட்டுப் பேரும் கையில் டீக்கிளாசை வைத்திருந்த போதுதான் அவள் தோன்றினாள். அதற்குமுன் அவளைஅங்கு நான் பார்த்ததில்லை. ’ஒரு டீ கொடு’ என்று அவள் இரைந்தாள். ரோட்டிலிருந்து சற்றே உயரமான படிகளைக்கொண்ட டீக்கடை அது. கீழே நின்று டீ குடித்துக்கொண்டிருந்தவர்களும் இப்போது மேலேறி விட்டனர். ரோட்டில் அவள் ஒற்றையாள். கைகளில் டீகிளாசோடு எல்லோரும் உள்ளொடுங்கி நிற்கின்றனர். கல்லாவில் இருந்தவர் வாடிக்கையாளரின் குழப்பத்தைத் தீர்க்கும் பொருட்டு அவளை அதட்டினார். அவள் நிறுத்தவில்லை. 'அண்ணே டீ வாங்கிக் கொடு', என்றாள் இப்போது. 'கொடுத்தாலும் குடிக்க மாட்டா', என்றார் கல்லாக்காரர். தனது வாடிக்கையாளர்களின் சஞ்சலம் போக்க அவர் இப்போது ஏதாவது செய்தாகவேண்டும். மிரட்சியை அவர் தணிக்கத்தான் வேண்டும். அவர்கள் ஆசுவாசமாகத் தங்களது பானத்தைப் பருக அவர் ஆவன செய்தாக வேண்டும்.
எல்லோரும் அவளை நேராகப் பார்க்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் தொடர்ந்து இரைந்து கொண்டிருந்தாள். எல்லோரும் மிக மெதுவாகக் குடித்துக் கொண்டிருந்தனர். முதலில் குடித்துமுடிப்பவர், கீழிறங்கி அவளைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். டீ தீர்ந்துவிடாமலிருக்க இப்போது கிளாசைக் கையில் சும்மா வைத்துக்கொண்டனர் சிலர். நாவால் வெறும் கிளாசைத் துழாவினர் சிலர்.
நான் துணிந்துவிட்டேன். கிளாசை வைத்துவிட்டுக் கீழிறங்கினேன். ஒன்றுமே இல்லை என்பது போல நான் அவளத் தாண்டினேன். ஒரு கணம் அவள் எனது கையைப் பிடித்தாள். பிடிக்கக்கூட இல்லை லேசாக ஒரு அழுத்து அழுத்தினாள்.
எல்லோரும் அவளை நேராகப் பார்க்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் தொடர்ந்து இரைந்து கொண்டிருந்தாள். எல்லோரும் மிக மெதுவாகக் குடித்துக் கொண்டிருந்தனர். முதலில் குடித்துமுடிப்பவர், கீழிறங்கி அவளைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். டீ தீர்ந்துவிடாமலிருக்க இப்போது கிளாசைக் கையில் சும்மா வைத்துக்கொண்டனர் சிலர். நாவால் வெறும் கிளாசைத் துழாவினர் சிலர்.
நான் துணிந்துவிட்டேன். கிளாசை வைத்துவிட்டுக் கீழிறங்கினேன். ஒன்றுமே இல்லை என்பது போல நான் அவளத் தாண்டினேன். ஒரு கணம் அவள் எனது கையைப் பிடித்தாள். பிடிக்கக்கூட இல்லை லேசாக ஒரு அழுத்து அழுத்தினாள்.